Saturday, August 14, 2010

பிடித்த பத்து பெண்கள் (18+) !!!!

பதிவுலகில் தொடர்பதிவு விளையாட்டுகள் தற்போது அதிகமாகி விட்டன..இது ஒரு வகையான அன்புத்தொல்லையா இருக்கு.இந்த விளையாட்டுக்கு என்னை அழைத்த திரு.பிரபு அவர்கள் தற்போது தலைமறைவாக இருப்பதால் அவரை தனிப்படை தேடி வருகிறது.(எதுக்கா? அத அவர் மாட்டினதுக்கப்புறம் சொல்றேன்)

சரி..வள வளன்னு பேசாம மேட்டருக்கு வரேன்..டைட்டன் யுவர் சீட் பெல்ட்ஸ்..பீ ரெடி டு  ஃபீல் ஏ நைஸ் ரீடிங் எக்ஸ்பீரியன்ஸ் (பில்டப் கொஞ்சம்  ஓவரா இருக்கோ? ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டா இப்படித்தான் )..இந்த பதிவுக்கு எதுக்கு 18+னு கடைசியா சொல்றேன்..

மிஸ் மீனா:
இவர் பேரு வேற..பார்க்க கொஞ்சம் மீனா மாதிரி இருப்பாங்க.டிவில மீனாவை பாக்கும்போது இவங்கள நினைச்சும்,இவங்கள பாக்கும்போது மீனாவை நினைச்சும் வாட்டர்பால்ஸ் விட்டுருக்கேன்..அப்போ எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயசிருக்கும்..முதல்முதலில் ஜொள்ளு விட்டது இவங்கள பார்த்துதான்.நான் என்னதான் நல்லா படிச்சாலும் என்னை டியூசனுக்கு அனுப்பும் கெட்ட பழக்கம் என் அப்பா,அம்மாவுக்கு உண்டு.அப்படிதான் பள்ளி முடிந்ததும் எக்ஸ்ட்ரா கிளாஸ் இவங்கட்ட படிச்சேன்.அவங்க அங்க சொல்லி கொடுக்குறது ஆல்ரெடி நான் படிச்சதுதாங்கிறதுனால அங்க சும்மா உக்காந்துருப்பேன்..அப்போதான் ஒரு நாள் அவங்க நான் உக்கார்ந்திருந்த டெஸ்க் மேல அவங்க கைய வைக்க , சும்மா இருந்த நான் அதுக்கு மேல சும்மா இருக்க முடியாம அவங்க விரலை தடவ ஆரம்பிச்சுட்டேன்.அதுக்கப்புறம் எப்படா டியூசன் வரும்,எப்படா கைய சாரி விரலை நோண்டலாம்ன்னு யோசிச்சிட்டே இருப்பேன்..இப்படியே நான் பண்ணிட்டு இருக்குறப்ப ஒரு நாள் என் பக்கத்துல உட்கார்ந்திருந்த ஃ ப்ரண்டு (ம்க்கும் நல்ல பிரண்டு) பாத்துட்டான்.அதுல இருந்து அந்த பழக்கத்தை விட்டுட்டேன்..

மிஸ் X :
இவங்க விரல் சம்பவத்துக்கு அடுத்த வருஷம் எனக்கு கிளாஸ் மிஸ்ஸா வந்தாங்க..பெயரை பாத்துட்டு தப்பா நினைச்சிடாதீங்க.நல்ல மிஸ்தான்.பெயர் சொல்லக்கூடாதுன்னுதான் அப்பிடி.இவங்க டியூசன் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டதுனால டச்சிங் இங்க மிஸ்ஸிங் :( ஒருமுறை பள்ளியில் டூர் கூட்டிட்டு போன போது லாஸ்ட் சீட் கார்னரில் இடம்பிடித்து விட்டேன்..ஆனால் என் தோழன் அந்த இடத்தைக் கேட்கவே ஈவ்னிங்கில் இருந்து அந்த இடம் அவனுக்கு என்று டீலானது.இதற்கிடையில் அவன் வைத்திருந்த ஜாமை நான் கொஞ்சம் கேட்க அவன் மறுக்க டீல் நோ டீல் ஆனது.இந்த நிலையில் இரவு நேரத்தில் நான் ஜன்னலோரம் அமர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்த மிஸ்.X எனதருகே வந்தமர்ந்து என்னை அவரது மடியில் போட்டு தூங்க வைத்தார்.அதுவரை கண்டிப்பான மிஸ்ஸாக மட்டுமே அவரைப் பார்த்து வெறுத்த என்னை அவரின் அரவணைப்பு இந்த லிஸ்டில் அவருக்கு ஒரு இடத்தை பெற்றுத் தந்து விட்டது :)

மிஸ் தேவயானி :
என் பள்ளிப் பருவத்தில் என்னை மிகவும் சோதித்தது இவர்தான்.பார்க்க கொஞ்சம் அமோகாவும் தேவயானியும் கலந்த தோற்றத்தில் இருப்பார்.நன்றாக பாடம் நடத்துவார்.குரலும் சோ ஸ்வீட்.மணமான பெண்களை சைட் அடிக்கக்கூடாது என்ற எனது கொள்கையை கடுமையான மறுபரிசீலனைக்கு உள்ளாக்கியவர்.இவர் புதிதாய் வகுப்புக்கு வந்த இரண்டாம் நாளிலேயே என் பெயரை தனியாக சொல்லி அழைத்ததால் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.இவரிடம் உள்ள ஒரே கெட்ட பழக்கம் பாடம் நடத்த ஆரம்பித்து விட்டால் தன் உடை மீதான கான்ஷியஸ்னசை இழந்து விடுவார்.இவர் 'structure of .. ' என ஆரம்பிக்க மாணவர்கள் வேறொரு ஸ்ட்ரக்சரைப் பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தனர்.இதையெல்லாம் பார்த்தால் மார்க் குறைந்து விடும் என்றெண்ணி அவரது வகுப்பு நேரங்களில் நான் தூங்கி விடுவது (அட்லீஸ்ட் தூங்குவது போல் நடிப்பது) என முடிவெடுத்தேன்.ஆனால் சீன் பார்த்த மாணவர்கள் என்னை விட அதிக மார்க் எடுத்து விட்ட காரணத்தினால் நான் எனது தூக்கத்தைக் கலைக்க வேண்டியதாகி விட்டது.பின்னர் ஏதோ ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நன்னாளில் நான் திருந்தும் வரை அவர் வகுப்பில் தூங்காமல் விழித்து விழித்து 'கவனித்துக்' கொண்டிருந்தேன்.ஆனாலும் ஏதோ ஒன்று என்னை உறுத்திக் கொண்டிருந்தது.பள்ளி விட்டு போவதற்கு முன்னால் அவரிடம் நடந்ததை சொல்லி இனிமேல் வகுப்பில் உடை மீதும் கொஞ்சம் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ள எத்தனிக்கையில், ஜூனியர் மாணவர்களின் காய்ந்து போன முகங்கள் கண்முன் விரிய அந்த எண்ணத்தை டிராப் செய்து விட்டேன்.

சினேகா:
ஒரு மூன்று,நான்கு வருடத்துக்கு முன்னால் என் தூக்கத்தை கெடுப்பதில் முதலிடம் இவளுக்குத்தான்.ஆளும் பார்க்க சினேகா போலவே செம கிக்காக இருப்பாள்.இவள் என்னருகில் வரும்போது  நான் மூச்சு விட்டதை விட பெருமூச்சு விட்டதே அதிகம்.இதுக்கு மேல சொன்னா அப்புறம் கூகிளில் அஜால் குஜால் கதைகளில் இந்த பதிவு வந்து விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.


நடிகை ஷாலினி:
ஷாலினி - இவரை எனக்கு சின்ன வயதிலிருந்தே ரொம்ப பிடிக்கும்.இவர் சின்ன வயதில் நடித்த போது எனக்கு ரொம்ப சின்ன வயது.காதலுக்கு மரியாதை படம் வந்த புதிதில் அந்த படத்தின் போஸ்டரைக் கூட விட மாட்டேன்.டிவியில் அந்த படத்தின் பாடல்களை எப்போது போடுவார்கள் என டிவியின் முன்னால் தவமிருப்பேன்.என்னவென்றே தெரியவில்லை அப்படி ஒரு கிரேஸ் ஷாலினியின் மீது.இப்போதும் கூட அது அப்படியே இருக்கிறது.என்ன அஜித்தை கட்டிக் கொண்டாரே என்னும் சின்ன கோபத்தை தவிர.

உஃப்...................அப்பாடா.....................
அஞ்சு பொண்ணுங்களுக்கே  மூச்சு வாங்குது..

இதுல இன்னும் அஞ்சு எல்லாம் தாங்காது..இதோட நிறுத்திக்குவோம்.

டிஸ்கி: இந்த பதிவுல வர்ற பெண்கள் எல்லாருக்குமே இப்போ வயசு 18-க்கு மேல இருக்கும்.அதுதான் இந்த பதிவுக்கு 18+ :)

டிஸ்கி 2 :ரொம்ப நாளா கிடப்பில் கிடந்ததை தூசி தட்டி கொஞ்சம் எடிட் பண்ணி ரொம்ப சோம்பேறித்தனம் பட்டு பாதிலேயே நிறுத்தின பதிவு.யாராவது விருப்பம் இருந்தா கண்டினியூ பண்ணுங்க..

கடைசியா சேர்த்தது : கொஞ்ச நாளா என்னென்னமோ நடக்குதுங்க..விகடன்ல நம்ம ட்வீட் வருது..மதன் கார்க்கி நம்ம ப்ளாக்ல கமென்ட் போடுறாரு..இந்த வாரம் அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருக்கு :) 



Tuesday, August 3, 2010

எந்திரன் கதை !!

இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இந்நேரம் மணி ௦௦௦௦௦00:43..

'இரும்பிலே ஓர் இருதயம்' பாடலை தொடர்ந்து பத்தாவது தடவைக்கு மேல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.அதிலும் பாடலின் 35 வது செகன்ட் முதல் 55 வது செகன்ட் வரை வரும் இசை என்னை ஏதோ செய்துக் கொண்டிருக்கின்றன.

சரி.கதை சொல்றேன்னு சொல்லிட்டேன்.கதையை சொல்லிட்டு அப்புறம் பாட்டை பத்தி பாப்போம்.







'விஞ்ஞானியான ரஜினி ஒரு ரோபோ உருவாக்குறாராங்க.அது திடீர்ன்னு உணர்ச்சி வந்து காதலிக்க ஆரம்பிச்சுடுது.அதுனால வர்ற பிரச்சனைகளும்,சுவாரசியங்களும் தான் கதை'

என்னாது..அதான் எங்களுக்கு தெரியுமேங்கிறீங்களா.வாஸ்தவம்தாங்க.எனக்கும் அவ்ளோதான் தெரியும்.

வெயிட் வெயிட்.உடனே கோவப்பட்டு 'X' அ  அமுக்கிடாதீங்க.சொல்றேன் சொல்றேன்.டிரைலரை உன்னிப்பாக கவனித்தால் ஒரு விஷயம் புரியும்.(ஒன்னுதாங்க புரிஞ்சுச்சு.ப்ளீஸ் விட்டுடுங்க !) ஐஸ் அடிக்கடி ரோபோவுக்கு முத்தமிடுகிறார்.ரோபோ விஞ்ஞானியின் காதலுக்கு தூது போகிறது.ஏன்னா அவருக்கு காதல் செய்ய நேரமில்லை.செல்லமாக ஒரு பொம்மையை கொஞ்சுவதை போல் அதைக்  கொஞ்சுகிறார்.அதை வைத்து ரோபோவுக்கு உணர்ச்சிகள் பொங்கி ஒரு கட்டத்தில் ஐஸை காதலிக்க ஆரம்பித்து விடுகிறது.அதனால் தான் உருவாக காரணமாக இருந்தா விஞ்ஞானியிடம் சண்டை போட்டுக் கொண்டு ஐஸை தூக்கிக் கொண்டு போய் விடுகிறது.இதற்கிடையில் ஐஸையும் வில்லன்களிடம் இருந்து காக்கிறது.
ஒரு நிமிஷம்.நாமளே இவ்ளோ யோசிச்சா ஷங்கர் எவ்ளோ யோசிச்சிருப்பாரு.பார்க்கலாம்.மேல நான் சொன்னது சரியா இருந்தா நான் புத்திசாலி.சரியா இல்லேன்னா நீ முட்டாளான்னு  கேக்குறீங்களா ? ஐ,அசுக்கு புசுக்கு.சரியா இல்லேன்னா ஷங்கர் புத்திசாலி.

ஓகே.இப்போ மறுபடியும் பாட்டை பாக்கலாம்..யாரும் பழக்க தோசத்தில தம்மடிக்க எந்திரிச்சு போனா பிச்சு பிச்சு.இது தலைவர் படம்.

இதுநாள்வரை இந்த பாடலை போல் எந்த பாடலும் இப்படி பைத்தியம் பிடித்துக் கேட்டதில்லை.இந்த பாடலின் வரிகளா,இசையா,இல்லை பாடகர்களின் குரலா என்னை ஈர்த்தது எதுவென தெரியவில்லை..இந்த பாடலில் இருக்கும் மந்திர சக்தி இந்த நேரத்தில் எனது தூக்கத்தை ஆக்கிரமித்து பதிவெழுத தூண்டி விட்டது.

இந்த பாடல் படமாக்கிய விதத்திலும் சொதப்பாமல் இருந்தால் ,தயங்காமல் சொல்லி விடலாம் 'இந்த வருடத்தின் ஹிட் இதுவென்று'.

ரோபோவின் காதலையும்,அதைக் காதலிப்பதில் அந்த பெண்ணுக்கு உள்ள பிரச்சனைகளையும் சொல்கிறது பாடல்.அதிலும் கீழே உள்ள வரிகள் ஒருமுறை என் நண்பர்களுடனான உரையாடலின் போது பேசப்பட்டவை.

'தொட்டுப் பேசும் நேரம் ஷாக்கடிக்க கூடும்.
காதல் செய்யும் நேரம் மோட்டார் வேகம் கூடும்
இரவின் நடுவில் பேட்டரிதான் தீரும்'

மேட்டர் இதுதான்.கல்லூரியில் அறிவியலின் வளர்ச்சியைப் பற்றி திடீரென்று என்னைப் பேச சொல்ல நானோ என்ன பேசவென்று தெரியாமல் அப்போது பேப்பரில் படித்த செக்ஸ் ரோபோவைப் பற்றி அள்ளி விட்டேன்.நம்ம பசங்க சும்மா இருப்பாங்களா.அவங்களுக்குதான் பாடத்தை தவிர மத்த  எல்லாத்திலயும் டவுட்டு நல்லா வருமே.ஆரம்பித்தார்கள்.

'டேய் ரோபோன்னு சொல்ற ஷாக் அடிக்காதா?'
'இல்லடா..மேல இன்சுலேட்டிங் மெட்டீரியல் போட்டுருப்பாங்க.ஒன்னும் கவலை வேணாம்'ன்னு சொன்னேன்.

அடுத்து செந்திலோட ஒன்னு விட்ட தம்பிக்கு ரெண்டு விட்ட பையன் ஒருத்தன் கேட்டான்

'சப்போஸ் நாம லாக் ஆகி இருக்கிற நேரத்துல பேட்டரி இறங்கிடுச்சுன்னா என்னடா பண்றது?'

'மறுபடியும் எந்திரிச்சு போயி சார்ஜ் ஏத்திக்கோடா'

'எசகுபிசகா மாட்டிக்கிட்டு இருக்கும்போது அப்படியே உள்ளே இருந்து வெளிய எடுக்க முடியலேனா என்னா பண்றது? அப்போ எப்படி எந்திரிச்சு போறது?' என அவன் கேட்டது தான் தாமதம்,சுற்றியிருந்த அனைவரும் குபீரென சிரித்து விட்டோம்.இப்போது கூட 'அதை' நினைத்தால் என்னை அறியாமல் சிரித்து விடுவேன்.(அவனுக்கு நான் லாஜிக்கலாக யோசித்து ஒரு பதிலை சொன்னேன்.அதை இங்கே சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது)

டிஸ்கி: மதன் கார்க்கி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார்.ஒருவேளை அவருட்டயும் இதே சந்தேகத்தை அவரோட மாணவர்கள் கேட்டுருப்பாங்களோ? அவரை எப்பவாச்சும் மீட் பண்ணா கேக்கணும்.

டிஸ்கி 2 :இந்த எந்திர சக்தியை எந்த 'கண்ண'பிரானாலும் தடுக்க முடியாது.எத்தனை களவாணிப் பயல்களை ஆதரித்தாலும் அவர்கள் எண்ணம் நிறைவேறாது.ஹி ஹி ஹி !!!